×

ரஜினியுடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு; எனக்கு இரண்டு கண்கள்; ஒன்று மோடி; மற்றொன்று ரஜினி: அர்ஜுன மூர்த்தி பேட்டி

சென்னை: மோடியும், ரஜினியும் எனக்கு இரண்டு கண்கள், பாஜகவோடு எனக்கு நல்ல உறவு உள்ளது, மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ரஜினியுடன் இணைந்தேன் என அர்ஜூன மூர்த்தி பேட்டியளித்தார். யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம் எனவும் கூறினார். தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார். தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினி விரும்பியது உண்மை தான் என கூறினார்.

மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்கவில்லை என ரஜினி தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி எனவும் கூறியுள்ளார். தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற நிலைப்பாட்டை ரஜினியே எடுப்பார் என கூறினார். ஆழமாக யோசித்து முடிவு செய்யும் ரஜினியை யாரும் நிர்பந்திக்க முடியாது என தெரிவித்தார். ரஜினியின் மக்கள் சேவையில் எப்போதும் உடனிருப்பேன் என உறுதியளித்தார்.


Tags : Rajini ,Modi ,Arjuna Murthy , Rajini, position, two eyes; One is Modi, Rajini
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...