சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனைகளை பெற்று பாவை விழா நடத்தலாம் என்று கோயில் அலுவலர்களுக்கு கமிஷனர் பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் பிராபகர் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் மார்கழி இசை திருவிழாவினை (பாவை விழா) தற்போதுள்ள கொரோனா நோய் தொற்றினை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் ஆலோசனை பெற்றும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றியும் பொறுப்புடன் நடத்திட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. விழா நடத்தி முடிக்கப்பட்ட விவரத்தினை புகைப்படத்துடன் அறிக்கையாக சமர்ப்பிக்க அலுவலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.