சென்னை: காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான மோத்திலால் வோரா நேற்று முன்தினம் உடல் நலம் குன்றி டெல்லி மருத்துவமனையில் தனது 93 வது வயதில் காலமானார். அரசுப் பொறுப்புகளன்றி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பதவியிலும் சிறப்பாக செயல்பட்ட வோரா, கலைஞர் மீது உயர்ந்த மரியாதையும் நட்புறவும் கொண்டிருந்தார். தனது 93வது பிறந்த நாளைக் கண்ட வோராவின் எதிர்பாராத மறைவுச் செய்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் என்று திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.