பெங்களூரு: பா.ஜ. அரசு என்ன செய்கிறது என்று அமைதியாக இருந்து கவனித்து வருகிறேன் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.வின் பி.டீம் மஜத கிடையாது மக்களின் நலனை குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். இதனால் பொறுமையாக காத்திருக்கிறேன். ஆனால் நிறம் மாறும் உடும்பு நான் கிடையாது. அதே போல் நான் காங்கிரஸ், பா.ஜ. ஆகிய கட்சிகளின் எந்த பக்கமும் கிடையாது. அரசியல் என்பது சக்கரம் போன்றது. தற்போதைய அரசியல் பணம் மூலம் விளையாடி வருகிறது.
இதனால் நான் அமைதியாக இருந்து பா.ஜ. அரசின் நடவடிக்கைகள் குறித்து கவனித்து வருகிறேன். எம்.எல்.ஏ. ஜி.டி.தேவகவுடா மஜதவிலிருந்து வெளியே செல்ல கால் வைத்துள்ளார் இதை நான் நேரடியாக தெரிவிக்கிறேன். நான் வெளிநாடு சென்றதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது என்று தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் நேரத்தில் காங்கிரஸ், பா.ஜ. கட்சிகளுக்கு எதிராக என்னுடைய போராட்டம் இருக்கும். அதே போல் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரிடம் அதிகமான நிதி இருக்கும் நீர்பாசனத்துறை இருந்தது. இதனால் கூட்டணி ஆட்சியை கவழிக்க முயற்சித்தார். என்னால் ஆட்சி கவிழவில்லை.
நீர்பாசனத்துறை மூலம் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டதா இல்லை மற்றவர்கள் வளர்ச்சியடைந்தார்களா என்று மக்கள் முடிவு செய்வார்கள். அது குறித்து அதிகமாக பேச விரும்பவில்லை. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கூட்டணி ஆட்சி இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இதனால் அவருக்கு எந்த உபயோகமும் இல்லை இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்வது தொடர்பாக அடிக்கடி பேசி வந்தார். அவர் எங்கெங்கு அமர்ந்து எதை எல்லாம் பேசினார் என்று செய்திகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இது மாநில மக்கள் அனைவருக்கும் தெரியும். மாநில கூட்டணி அரசு கவிழ்வதற்கு நான் காரணம் கிடையாது. நான் ஒரு கிளர்க் போல் வேலை செய்தேன். முதல்வராக கண்ணீர் விட்டேன். நான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி கிடையாது. சித்தராமையா சந்தர்ப்பவாத அரசியல்வாதி எனவே கூட்டணி ஆட்சியை கவிழ்த்தார். ஆட்சி கவிழ்வதற்கு அவரே காரணம் என்றார். தற்போதைய அரசியலில் பணம் விளையாடி வருகிறது. இதனால் நான் அமைதியாக இருந்து பா.ஜ. அரசின் நடவடிக்கைகள் குறித்து கவனித்து வருகிறேன்.