சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம், முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம் என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத் துரோகம் செய்ய துணிவது சரியா? இதன் பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
