ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் முதன்முறையாக, ஒரு போலீஸ் ஸ்னிஃபர் நாய்க்கு இரண்டு காவல்துறையினருடன் இணைந்து மாதத்தின் சிறந்த காவலர் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ராய்கார் எஸ்.பி. சந்தோஷ் சிங், ரூபி என்ற நாயுடன் சேர்த்து இரண்டு காவல்துறையினருக்கு, மாதத்தின் சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் சட்டம் ஒழுங்கு பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொருவர் நாய் கையாளுபவர் வீரேந்திரா ஆவார். ரூபி என்ற நாய், சாரங்கர் ராயல் அரண்மனை கொள்ளை வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தடயங்களை கொடுத்து தீர்வு காண வழிவகுத்தது..
சாரங்கர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள சாரங்கர் ராஜ் மஹாலில், சுமார் 6 லட்சம் ரூபாய் விலை உயர்ந்த இரண்டு வெள்ளி தட்டுகள் திருடப்பட்டன. ரூபி உதவியுடன் வீரேந்திரா அவற்றை மீட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்தார்.ஒவ்வொரு மாதமும் நல்ல வேலையைச் செய்யும் காவல்துறையினர் மாதத்தின் காவலராக அறிவிக்கப்படுவதன் மூலம் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் புகைப்படங்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் சில பண விருதுகளுடன் வைக்கப்படுகின்றன.” என்றார்.