சென்னை: கொரோனா சிகிச்சை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மக்கள் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்கள் அரசு செவிலியர்கள் ஆவார்கள். தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று அபாயம் முழுமையாக நீங்காததால் செவிலியர் சேவை மக்களுக்கு தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.