சென்னை: சென்னை தீவுத்திடல் அருகே வசிக்கும் குடிசைவாசிகளை வேறு இடத்துக்கு மாற்றும் அரசின் முயற்சி குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.