×

தேர்தலை சீர்குலைக்க முயற்சி 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என அடையாளம் காணப்படவில்லை. பட்டானின் சிங்போராவில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.  ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். அவர்களின் முயற்சியை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.

Tags : militants ,election , 3 militants shot dead in an attempt to disrupt the election
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி