×

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா

சென்னை: நீதிமன்றத்தையும், நீதிமன்ற ஊழியர்களையும் விமர்சித்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் முறையாக உணவு உட்கொள்ளாததால், குடல் அயற்சி ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, நுரையீரலில் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தது. இதனால், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி வாயிலாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Tags : Karnan ,Corona , Corona to retired Judge Karnan
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...