×

காரைக்குடியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டியும் அவர் வளர்த்த நாயும்

காரைக்குடி: இன்று காலை காரைக்குடி சி.மெ வீதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் வயதான அம்மாவும் அவர் வளர்த்த நாயும் உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்; மின்கம்பிகளில் சுற்றியிருக்கும் கொடிகள் படர்ந்துள்ளது. கடந்த வாரம் மின்வாரிய அதிகாரிகளைப் பார்த்து புகார் செய்தபின்பும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று ஒரு அதிகாரியை அழைத்து எச்சரித்தோம் என கூறுகின்றனர். மின் வாரியம் மாதம்தோறும் சீரமைப்பு பணி செய்யும் போது எப்படி கவனிக்காமல் விட்டார்கள்? என்பது கேள்விக்குறியாக உள்ளது.


Tags : Karaikudi , An old woman who died in a power outage in Karaikudi and her dog
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க