×

வீட்டில் எறும்புகளை அகற்றுவதற்காக வைத்த தீயில் சிக்கி பெண் இன்ஜினியர் பலி: 3 பேர் படுகாயம்

அண்ணாநகர்: அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களது மகள் சங்கீதா (27). இன்ஜினியரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சங்கீதா, தனது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அறையில் நிறைய எறும்புகள் இருந்ததால், அவற்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பற்றி, உடல் முழுவதும் மளமளவென பரவியது. இதனால், அலறி கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை காப்பாற்ற முயன்றனர்.

இதில், தந்தை சத்தியமூர்த்தி, தாய் தேவி, அண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இவர்கள் 4 பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கீதா இறந்தார். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : engineer ,home , Female engineer killed in fire at home: 3 injured
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...