புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானக்கடையில் புகுந்து பணம் மற்றும் விலையுயர்ந்த மதுபானங்களை திருடியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 16ம் தேதி 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் புகுந்து ரூபாய் 1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்துடன் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த மதுபானங்களையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். சிசிடிவி பதிவுகளை வைத்து ஆய்வு செய்த போது 3 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மனோகரன் என்பவரை கைது செய்த போலீசார் பிளாக் டாக், புளூலேபிள் உள்ளிட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.