×

பெரம்பலூரில் புதிய தொற்று இல்லை தமிழகத்தில் 1,652 பேருக்கு கொரோனா: 18 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பேருக்கு 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 62,415 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 1,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 492 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கபடவில்லை. இதைச் சேர்த்து தமிழகத்தில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 61 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 2,314 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது  வரை 7 லட்சத்து 34 ஆயிரத்து 970 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 ஆயிரத்து 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். நேற்று மட்டும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். .



Tags : outbreak ,Perambalur Corona ,Tamil Nadu , There is no new infection in Perambalur Corona for 1,652 people in Tamil Nadu: 18 deaths
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...