சென்னை: சூளைமேடு கில்நகர் பார்க் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மொபட்டில் வந்த இளம்பெண், போலீசாரை பார்த்ததும் மொபட்டை திருப்பிக்கொண்டு சென்றார். போலீசார் விரைந்து சென்று, அந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்து, மொபட்டை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கொளத்தூர், விநாயகபுரம் வெங்கடேஸ்வரா நகர் 6வது தெருவை சேர்ந்த உதயவாணி (33) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரிக் கின்றனர்.