×

மொபட்டில் கஞ்சா கடத்திய இளம்பெண் பிடிபட்டார்

சென்னை: சூளைமேடு கில்நகர் பார்க் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மொபட்டில் வந்த இளம்பெண், போலீசாரை பார்த்ததும் மொபட்டை திருப்பிக்கொண்டு சென்றார். போலீசார் விரைந்து சென்று, அந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்து, மொபட்டை சோதனை செய்தனர்.  அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கொளத்தூர், விநாயகபுரம் வெங்கடேஸ்வரா நகர் 6வது தெருவை சேர்ந்த உதயவாணி (33) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரிக் கின்றனர்.



Tags : Teen caught smuggling cannabis on moped
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?