×

வீடு புகுந்து திருடிய போது தவறவிட்ட செல்போனால் சிக்கிய கொள்ளையர்கள்

சென்னை: ஜபர்கான்பேட்டையில் ஓட்டல் பணியாளர்கள் 5 பேர் வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள், இரவு நேரத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்குவது வழக்கம். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் 2 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த வீட்டிற்குள் புகுந்து 4 செல்போன்களை திருடிச் சென்றனர். புகாரின்பேரில் குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கொள்ளையர்கள் தங்களின் செல்போனை வீட்டிற்குள் தவறவிட்டு சென்றது தெரிந்தது. அதை வைத்து, கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : robbers ,house , Robbers caught with a lost cell phone when they broke into a house
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்