சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் 17 ஆயிரம் பேருக்கு சிடிஸ்கேன் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று தேசிய கதிரியக்கவியல் நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, கதிரியக்கவியல் துறை பேராசிரியர் சுஹாசினி, மருத்துவர்கள் பராதி பிரியா, மருத்துவர்கள் விஜயலட்சுமி, சுரேஷ் குமார் மற்றும் கதிரியக்க துறை தொழில் நுட்ப பணியாளர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஜெயந்தி, கொரோனா காலத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 17 ஆயிரம் சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளும், 16 ஆயிரம் எக்ஸ் ரே சோதனையும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.