×

சிறையில் கைதி செல்வமுருகன் மரணம்; குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் :ராமதாஸ்

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவ.7) தன் ட்விட்டர் பக்கத்தில், காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன. காவல் நிலைய மரணங்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்!

நெய்வேலி காவல் நிலைய மரணங்களுக்குக் காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! எனப் பதிவிட்டுள்ளார்.

Tags : Selvamurugan ,Death ,government ,jail ,Ramadas ,Tamil Nadu , Government Jobs, Government of Tamil Nadu, Ramadas
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...