×

மாணவர்கள் சேர்க்கை 20ம் தேதி வரை நீட்டிப்பு

திருவள்ளூர்: 2020ம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அம்பத்தூர், அம்பத்தூர் (மகளிர்), வடகரை மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் 8 ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற நேரடி சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சேர்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் 20 ம் தேதிக்குள் காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நேரில் சமர்பித்து உரிய சேர்க்கை ஆணை பெற்றுக்கொள்ளலாம்.


Tags : Extension of student admission till 20th
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...