மும்பை: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையை அடுத்து இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்ந்து 41,269 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 12,099 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.