சென்னை: சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக மலர்சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மலர் சந்தையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பூ வாங்க வரும் வியாபாரிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.