×

தேசிய கொடியை அவமதித்ததாக புகார் பாஜ தலைவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் குகேஷ் தாக்கல் செய்துள்ள மனு:
சுதந்திர தினத்தன்று தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, பாஜ கட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இது தொடர்பாக எல்.முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல.கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புகார் மீது நடவடிக்கை எடுத்து முருகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியுமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : court ,BJP , Petition seeking registration of case against BJP leader for insulting national flag: ICC hearing soon
× RELATED நயினாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி...