சென்னை: கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் பொதுநல மனுவாக தாக்கல் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக் கோரி மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் மவுரியா தாக்கல் செய்த மனுவிற்கு, பொதுநல மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தயுள்ளது. பொதுநலம் சார்ந்த விவகாரம் என்பதால் ரிட் மனுவை திரும்ப பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.