×

தமிழகத்தில் புதிய, பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் புதிய, பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்திர் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.


Tags : Election Commission ,constituencies ,districts ,Tamil Nadu , New in Tamil Nadu, Districts, Constituency, Election Commission
× RELATED தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைவுக்கு...