செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மறைந்த காவல்துறையினருக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செங்கல்பட்டு காவல்துறை சார்பில், அரசு ஐடிஐ மைதானத்தில், கடந்த ஆண்டு பல்வேறு சூழ்நிலைகளில் தன் உயிரை கொடுத்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும்வகையில், உயிர்நீத்த காவலர் நினைவுத்தூணின் அருகில் மலர்வளையம் வைக்கப்பட்டது. எஸ்பி கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து, உயிர்நீத்த போலீசாருக்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில், செங்கல்பட்டு மாவட்டதை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.