×

உத்தரபிரதேசத்தில் பாலியல் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை : 50 நாளில் அதிரடி தீர்ப்பு

ஹப்பூர், :உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் அடுத்த தானா கர் பகுதியில் கடந்த ஆக. 6ம் தேதி  தனது வீட்டிற்கு வெளியே 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்ேபாது பைக்கில் வந்த குற்றம்  சாட்டப்பட்ட தல்பத் என்பவன், அந்த சிறுமியைக் கடத்தி சென்று அன்றிரவு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான்.  மயக்கத்தில் கிடந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தலிபதை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கு ஹபூரைச் சேர்ந்த கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் சிறப்பு நீதிபதி (போக்சோ) பினா நாராயண் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட தல்பத்தை சாகும் வரை சிறையில் அடைக்க ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். ​இந்த வழக்கு சம்பவம் நடந்த 50 நாட்களில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : death ,sex offender ,Uttar Pradesh , Uttar Pradesh, sex offender, till death, imprisoned
× RELATED உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள்...