சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 கோடி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.