×

மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து: மணிப்பூர் வாலிபர் கைது

துரைப்பாக்கம்: மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த லியாங்கன் தூங் (23), பெசன்ட்நகரில் உள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன், மோய் (21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, திருவான்மியூர் திடீர் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கோபித்துக்கொண்ட மோய், அதே பகுதியில்  வசிக்கும் உறவினர் சாமுவேல் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் சாமுவேல் வீட்டிற்கு சென்ற லியாங்கன் தூங், மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது, சாமுவேல் அவரை அனுப்ப மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த லியாங்கன் தூங் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து  சாமுவேலை சரமாரியாக  குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.
படுகாயமடைந்த  சாமுவேலை அவரது உறவினர்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லியாங்கன் தூங்கை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Manipur ,home , Manipur youth arrested for shouting at relative for refusing to send wife home
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...