திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 8,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 7,723 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மாநிலம் முழுவதும் தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 95,407 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.