×

தமிழகத்தில் குறைய தொடங்குகிறதா கொரோனா பாதிப்பு: 42 நாட்களுக்கு பிறகு மீண்டும் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கு கீழ் சென்றது

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,61,264-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,61,264-ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,07,203 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,165 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,314-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1212 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 183251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 84,02,994 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,162 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 191 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 43,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,99,382 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,877 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,61,850 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,001 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு ஒரு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : exposure ,Corona ,Tamil Nadu , Corona exposure begins to decline in Tamil Nadu: After 42 days the daily exposure again went below 5,000
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து