×

ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால் அதானி அம்பானியின் ஊழலை மோடியே அம்பலப்படுத்தியுள்ளார்: காங்கிரஸ்

டெல்லி: அதானி, அம்பானியிடம் இருந்து லாரி, லாரியாக காங்கிரசும், ராகுல் காந்தியும் பணம் பெற்றதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். தேர்தலுக்கு முன் அம்பானி, அதானியை விமர்சித்து வந்த ராகுல் காந்தி, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவர்களை விமர்சிப்பது இல்லை என மோடி கூறியிருந்தார். அதானி, அம்பானியிடம் பணம் வாங்கிக் கொண்டு விமர்சிப்பதை நிறுத்தி விட்டாரா என ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என மோடி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி:
மோடியின் விமர்சனம் மூலம் அதானி, அம்பானி கருப்புப் பணத்தை பெட்டி, பெட்டியாக கொடுத்திருப்பது அம்பலம் ஆகியுள்ளது. ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால் அதானி அம்பானியின் ஊழலை மோடியே அம்பலப்படுத்தியுள்ளார். அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அதானி, அம்பானி பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி தேர்தலுக்காக அவர்களைப் பற்றி பேசுவதாக அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
தோல்வி பயத்தில் பிரதமர் மோடி தனது நண்பர்களையே விமர்சிக்க தொடங்கி விட்டார். காலம் மாறிக்கொண்டிருக்கிறது! நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல. மக்களவைத் தேர்தலில் 3 கட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில் தற்போது தனது நண்பர்களை தாக்க தொடங்கிவிட்டார். பிரதமர் பதவி ஆட்டம் காண்கிறது என்பதை மோடி உணரத் தொடங்கி விட்டதாகவும் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால் அதானி அம்பானியின் ஊழலை மோடியே அம்பலப்படுத்தியுள்ளார்: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Modi ,Adani Ambani ,Rahul Gandhi ,Congress ,Delhi ,Adani ,Ambani ,Dinakaran ,
× RELATED “விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை...