கடலூர்: புவனகிரி அருகே தெற்குதிட்டை கிராமத்தில் கடலூர் ஆட்சியர், எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டனர். தெற்குதிட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிக்கு அவமதிப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியிடம் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி விசாரணை மேற்கொண்டார். தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து துணைத் தலைவர் அவமதித்தார்.