சென்னை: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்துத்துறை தலைவர்கள், டி.ஜி.பி., காவல் ஆணையர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அக்டோபர் 4ல் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடவும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.