டெல்லி: ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் இன்று மதியம் ஹத்ராஸ் பயணம் மேற்கொள்கின்றனர். ஏற்கனவே உத்திரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தள்ளி விடப்பட்ட நிலையில் மீண்டும் ராகுல் காந்தி செல்கிறார். ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல் தலைமையில் காங்கிரஸ் குழுவினர் செல்கின்றனர்.