×

பெரியார் சிலை அவமதிப்பு குற்றவாளிகளை கைது செய்வதில் காவல் துறை அலட்சியம் :முத்தரசன் கண்டனம்

சென்னை, :இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர், சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா சிலைக்கு, சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசி, செருப்பு மாலை போட்டு அவதித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  சட்டம் - ஒழுங்கை காக்க, பராமரிக்க வேண்டிய காவல் துறை இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டுவதும் இந்த இழி செயல்கள் தொடருவதற்கு காரணம் என குற்றம் சாட்டுகிறோம்.

இந்த சட்ட விரோத, சமூக விரோத சம்பவங்களை தடுக்கும் முறையில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இனாம் குளத்தூரில் பெரியார் சிலையை இழிவு செய்த குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்து, தண்டிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம், என்றார்.

Tags : Periyar ,Mutharasan , Periyar idol, contempt, culprit, arrest, mutharasan, condemnation
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...