×

டாக்டர் தம்பதிக்கு கொரோனா உறுதி

திருப்போரூர்: சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவராக வேலை பார்க்கிறார். திருப்போரூர் ஒன்றிய தலைமை மருத்துவராக உள்ளார். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம், சிறுங்குன்றம், செம்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. இவரது மனைவி வள்ளியம்மாள், சென்னை மூவரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சுப்பிரமணியன், கேளம்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பரிசோதனை, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

கடந்த வாரம் சுப்பிரமணியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மனைவியுடன் பரிசோதனை செய்து கொண்டு, விடுப்பு எடுத்து, சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்றார். இந்நிலையில், மருத்துவர் சுப்பிரமணியனின் பரிசோதனை முடிவில், கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது மனைவி வள்ளியம்மாளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இருவரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருப்போரூர் ஒன்றிய தலைமை மருத்துவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டதால் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.


Tags : Corona , Dr. Corona confirms to the couple
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...