மதுரை: தென்காசியில் போலீஸ் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினர் ரூ.1 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற வீரகேளம்புதூரை சேர்ந்த குமரேசன் என்பவர் உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதில் மகன் இறந்ததாக மதுரைகிளையில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.