சென்னை: எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக் கழகத்தில் 2020-21 கல்வி ஆண்டுக்கான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் போன்ற முதுகலை படிப்புகளுக்கு TANCA 2020 ஆன்லைன் கவுன்சலிங் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள், செப்டம்பர் 30ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.