சென்னை: சென்னை மதுரவாயல் அருகே அடையாளம்பட்டில் ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் 37 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வழக்கறிஞர் செல்வகுமார், திருச்செந்தூர் சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். செல்வகுமார் வீட்டில் ரூ.1.5 லட்சம் வைர நகையையும் கொள்ளை அடித்துச் சென்றவர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.