சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.