×

கொரோனா சிகிச்சை மைய 4வது மாடியில் இருந்து விழுந்து பெண் நோயாளி பரிதாப மரணம்

சென்னை: மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில்  தமிழக அரசின் கொரோனா தனிமை வார்டு  இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலை கொரோனா மையத்தின் 4வது மாடியில் இருந்து ஒரு பெண் கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்த பெண் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த செல்வி (48), என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1ம் தேதி இந்த மையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று அவர்  அடிக்கடி கூறி வந்த நிலையில் திடீரென 4வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். இவர் இங்கிருந்து வெளியே செல்ல முயன்றபோது தவறி விழுந்து இறந்தாரா அல்லது மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்து போனாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்கின்றனர்.

Tags : patient ,floor ,corona treatment center Female patient ,corona treatment center , Corona, treatment center, 4th floor, female patient who fell, tragic death
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...