×

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகை ஜெனிலியா

சென்னை: தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா. மேலும் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். புதுப்பட வாய்ப்புகள் குறைந்தபோது, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது மும்பையில் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வரும் அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெனிலியா கூறியதாவது:
3 வாரங்களுக்கு முன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகள் இருந்தது. நேற்று முன்தினம் எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. கொரோனா தொற்றுக்கு எதிரான எனது போராட்டம் எளிமையாக இருந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஆனால், 21 நாட்கள் தனிமையில் இருந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதிக நேரம் வீடியோகாலில் பேசினாலும், டிஜிட்டல் உலகில் மூழ்கியிருந்தாலும், தனிமையின் கோரமுகத்தை தடுக்க முடியாது. தற்போது மீண்டும் என் குடும்பத்தாருடன் இணைந்திருப்பதில் அதிக மகிழ்ச்சி. உங்களைச் சுற்றி அன்பு நிறைந்தவர்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற நேரங்களில் ஒருவருக்கு அதுதான் மிகவும் தேவை. கொரோனா அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள். எதற்கும் பயப்படாமல் தைரியமாக இருப்பதுதான், கொரோனா என்ற பேயை எதிர்த்துப் போராட சிறந்த வழி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Genelia , Corona, Mindar, actress Genelia
× RELATED சித்தார்த்தை 17 வருடத்துக்கு பிறகு...