×

தூத்துக்குடி மாவட்ட பதிவுத்துறை உதவி ஐ.ஜி கொரோனாவுக்கு பலி

வேலூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, தேசூர் பாட்டை சாலையைச் சேர்ந்தவர் ரவிசந்திரன்(55). இவர் தூத்துக்குடி மாவட்ட பதிவுத்துறை உதவி ஐ.ஜியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags : IG Korona ,Thoothukudi District , Thoothukudi District, Registration Assistant IG, Corona, Pali
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்