சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,25,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,09,585 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,581 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,223 ஆக உள்ளது.
சென்னையில் 60.32% ஆண்களும் 39.68% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(23.08.2020) மட்டும், 12,625 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்
1 திருவொற்றியூர் 3,841
2 மணலி 1,841
3 மாதவரம் 3,740
4 தண்டையார்பேட்டை 9,975
5 ராயபுரம் 11,773
6 திருவிக நகர் 8,547
7 அம்பத்தூர் 7,219
8 அண்ணா நகர் 12,585
9 தேனாம்பேட்டை 11,322
10 கோடம்பாக்கம் 12,533
11 வளசரவாக்கம் 6,539
12 ஆலந்தூர் 3,765
13 அடையாறு 8,187
14 பெருங்குடி 3,394
15 சோழிங்கநல்லூர் 2,800
16 இதர மாவட்டம் 1,524.
மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 260
2 மணலி 152
3 மாதவரம் 620
4 தண்டையார்பேட்டை 780
5 ராயபுரம் 765
6 திருவிக நகர் 950
7 அம்பத்தூர் 1,404
8 அண்ணா நகர் 1,481
9 தேனாம்பேட்டை 858
10 கோடம்பாக்கம் 1,631
11 வளசரவாக்கம் 1,126
12 ஆலந்தூர் 590
13 அடையாறு 1,232
14 பெருங்குடி 567
15 சோழிங்கநல்லூர் 505
16 இதர மாவட்டம் 302 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.