×

புதுவையில் இ-பாஸ் நடைமுறை ரத்து

புதுச்சேரி: இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், 5 மாதத்துக்கு பிறகு இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு நேற்று முன்தினம் ரத்து செய்துள்ளது. அதன்படி பொதுமக்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு நேற்று அறிவித்துள்ளது.

Tags : Cancellation , New, e-pass procedure, cancellation
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...