×

ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி பேச்சு

நாமக்கல்: ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். சட்டம், ஒழுங்கை காப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம். மதுரையை 2 வது தலைநகராக்குவது அமைச்சர் உதயகுமாரின் கருத்து; அரசின் கருத்து அல்ல என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 68 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என யாரையும் கூறவில்லை. ஆய்வுக்கூட்டத்திற்கு வருவோர் கொரோனா சோதனை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : speech ,Palanisamy ,Namakkal , Rowdyness, harsh action, Namakkal, Chief Minister Palanisamy
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...