சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நலமுடன் மீண்டு வரவேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளாக மாறாத மகா கலைஞர் எஸ்பிபி என்று வைரமுத்து கூறியுள்ளார். தன் முதல் பாடலை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் என்று கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது கடைசி பாடலையும் அவர் தான் பாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.