மதுரை: கீழடி அகழாய்வு நடக்கும் பகுதிக்கு அருகே மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கு பதியப்பட்டுள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட மணல் கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரும் என்று உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் புகைப்படத்துடன் கூடிய பதில் மனு அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.