சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மரைன் போலீசுக்கு கடலோர பாதுகாப்பு படையினர் பயிற்சி அளித்தனர். கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. நவீன ஆயுதங்களை கையாள்வது, கப்பலை இயக்குவது, கப்பலின் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. ரோந்து பணியை மேற்கொள்ளுதல், கடலில் சிக்கியவர்கள் மீட்பவது தொடர்பாகவும் பயிற்சி தரப்பட்டது. தகவல் தொடர்பு, பாதுகாப்பு, கண்காணிப்பு, கடல் சார் சட்டங்களை அமல்படுத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் விளக்கம் தரப்பட்டது.