சென்னை: மார்ச் முதல் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 1,80,571 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளது. பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசரச் சிகிச்சை மையங்களில் 1,29,206 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் 33,374 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.